அக்கரைப்பற்று – திருகோணமலை தனியார் பேரூந்து விபத்து
அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலை நோக்கி இன்று (25) காலை 25க்கு மேற்பட்ட பயணிகளுடன் பயணித்த சொகுசு பேரூந்து காலை 7.00 மணியளவில் சேருநுவர- மஹிந்தபுர சந்தியில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
Published December 25, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலை நோக்கி இன்று (25) காலை 25க்கு மேற்பட்ட பயணிகளுடன் பயணித்த சொகுசு பேரூந்து காலை 7.00 மணியளவில் சேருநுவர- மஹிந்தபுர சந்தியில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த பயணிகள் சேருநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 6பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக மூதூர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்