இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னாள் அமைச்சர் ரொஷான் ஆஜர்!
முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று (26) இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளைப்
Published December 26, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று (26) இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அரசுச் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாகவே ஷசீந்திர ராஜபக்ஷவுக்கு எதிராக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.