இன்றும் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.
இன்று (28) வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (28) வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
சபரகமுவ மாகாணம், காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சில பகுதிகளில் 50 மில்லிமீட்டருக்கு மேல் கனமழை பதிவாகலாம்.
மேலும், மத்திய மலைநாட்டின் கிழக்கு பகுதி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, மொனராகலை, திருகோணமலை மாவட்டங்களிலும் மணிக்கு சுமார் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
மேற்கு, சபரகமுவ, மத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழையால் ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வானிலை ஆய்வு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.