யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது.
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவரும் , மேலும் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Published December 28, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவரும் , மேலும் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீண்ட காலமாக இளைஞர்கள் , பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை, பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் பின்னர், ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர்.
அதேவேளை , போதை மாத்திரைகளுடன் இருவரும் , மாவா பாக்குடன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
