Rebuilding Sri Lanka நிதிக்கு தோட்டத் தொழிலாளர்கள் நன்கொடை
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக அரசால் நிர்வகிக்கப்படும் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு தமது ஒருநாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர்
Published December 28, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பொகவந்தலாவை கொட்டியாகல (NC பிரிவு) தோட்டத் தொழிலாளர்கள், “டித்வா” புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக அரசால் நிர்வகிக்கப்படும் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு தமது ஒருநாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இதன் மூலம் ரூ.108,000 நிதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தியோகப்பூர்வ நிகழ்வு நேற்று நடைபெற்ற நிலையில், தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் மஞ்சுள சுரவீர மற்றும் கிருஷ்ணன் கலைச்செல்வி கலந்து கொண்டனர்.
