நீதிக்கான மாபெரும் கையெழுத்து போராட்டம்.
தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படுவதற்கு ஐக்கிய நாடுகள்...
Published August 27, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையிடமும் பன்னாட்டு சமூகத்திடமும் நீதி கோரி தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களில் மாபெரும் கையெழுத்து போராட்டமானது கடந்த 23.08.2025 அன்று தாயகச்செயலணி எனும் அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இறுதி நாளான இன்றையதினம் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இவ் கையெழுத்து போராட்டத்தில் இளைஞர் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டு ஆதரவாக கையொப்பம் இட்டமையை அவதானிக்க கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

