நாட்டில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது.
எகிப்திலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,881 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 2,638 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.
கொரோனா தொற்று நோயாளர்களில் 232 பேர் தொடர்ந்தும் நாடு முழுவதும் உள்ள 09 வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, 49 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.