விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர்

Published January 1, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து பலவகையான போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதன்படி, நேற்று புதன்கிழமை(31) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 541 கிராம் ஹெரோயின், 685 கிராம் ஐஸ், 329 கிராம் கஞ்சா, 71 கஞ்சா செடிகள், 02 மில்லிகிராம் குஷ் ரக போதைப்பொருள், 11 மில்லிகிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 536 போதை மாத்திரைகள், 42 கிலோகிராம் மதன மோதகம் மற்றும் 143 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அதேநேரம், குறித்த போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 616 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 17 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், 618 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 07 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *