இலங்கை கடற்பரப்பில் அனுமதியின்றி நுழைந்த இந்திய மீனவர்கள் கைது.
இலங்கை கடற்பரப்பிற்குள் அனுமதியின்றி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
இலங்கை கடற்பரப்பிற்குள் அனுமதியின்றி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
நேற்று (01) இரவு கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமடோர் புத்திக சம்பத் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையின் போது, அவர்கள் பயணித்த மீன்பிடி படகும், மீன்பிடிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக இலங்கையின் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.