பத்தரமுல்லை பகுதிகளுக்குத் தடைப்பட்டிருந்த நீர் விநியோகம் தற்போது சீர்செய்யப்பட்டுள்ளது.
தெஹிவளை, கல்கிசை உள்ளிட்ட பல பகுதிகளுக்குத் தடைப்பட்டிருந்த நீர் விநியோகம் தற்போது சீர்செய்யப்பட்டுள்ளது. அம்பத்தலையிலிருந்து தெஹிவளைக்கு நீர் கொண்டு செல்லும் பிரதான குழாயில், பத்தரமுல்லை – தலங்கம
தெஹிவளை, கல்கிசை உள்ளிட்ட பல பகுதிகளுக்குத் தடைப்பட்டிருந்த நீர் விநியோகம் தற்போது சீர்செய்யப்பட்டுள்ளது.
அம்பத்தலையிலிருந்து தெஹிவளைக்கு நீர் கொண்டு செல்லும் பிரதான குழாயில், பத்தரமுல்லை – தலங்கம குழாய் வீதி பகுதியில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாக நேற்று இரவு 10 மணியளவில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்தக் குழாய் வெடிப்பினால் ஏற்பட்ட நீர்க் கசிவு காரணமாக அவ்வீதியும் நீரில் மூழ்கியிருந்தது.
இந்நிலையில், திருத்தப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டிருந்த மொரட்டுவ, ராவதாவத்தை, சொய்சாபுர, இரத்மலானை, கல்கிசை, தெஹிவளை, வெள்ளவத்தை, பாமன்கடை, முல்லேரியா மற்றும் கொலன்னாவ ஆகிய பகுதிகளுக்கு மீண்டும் நீர் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.