கஹவத்தை துப்பாக்கிச்சூடு – சந்தேக நபர் கைது.
கஹவத்தை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய...
Published August 27, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கஹவத்தை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பிரிவு குற்றத் தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி கஹவத்தை பொலிஸ் பிரிவில் ஒருவரை சுட்டுக் கொலை செய்ய உதவிய சந்தேக நபர் நேற்றைய தினம் (26) பெல்வாடிய பகுதியில் வைத்து இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.