உலககிண்ணத்தில் இருந்து விலகும் சனத் ஜயசூரிய

எதிர்வரும் 20-20 உலகக்கிண்ணத் தொடரின் பின்னர், இலங்கை கிரிக்கெட் அணியின்

Published January 4, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

எதிர்வரும் 20-20 உலகக்கிண்ணத் தொடரின் பின்னர், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக சனத் ஜயசூரிய தெரிவித்தார்.

 தனது ஒப்பந்தக் காலம் மேலும் உள்ளபோதிலும், தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் நீடிப்பதற்கு தனக்கு எண்ணம் இல்லை என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். 

 கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவுடனான தொடரின்போது இடைக்காலப் பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டிருந்த போதிலும், அந்த ஆண்டின் இறுதியில் அவர் முழுநேரத் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார். 

 சனத் ஜயசூரியவின் பதவிக்காலத்தில், இலங்கை அணி அனைத்து வகையான போட்டிகளிலுமாக  60 போட்டிகளில் விளையாடியுள்ளது. 

 இதில் 29 வெற்றிகளைப் பெற்றுள்ளதுடன், 29 தோல்விகளைச் சந்தித்துள்ளது. இரண்டு போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers விளையாட்டு and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *