இந்திய பொருட்களுக்கு இருபத்தைந்து சதவீத வரிவிதிப்பு இன்றுமுதல் அமுலாகின்றது
இந்திய பொருட்களுக்கு கூடுதலாக இருபத்தைந்து சதவீத வரிவிதிப்பு இன்றுமுதல் அமுலாகின்றது எந்த அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய போவதில்லையென இந்திய பிரதமர் தெரிவிப்பு. இந்திய இறக்குமதி பொருட்களுக்கு கூடிய இருபத்தைந்துவீத
இந்திய பொருட்களுக்கு கூடுதலாக இருபத்தைந்து சதவீத வரிவிதிப்பு இன்றுமுதல் அமுலாகின்றது எந்த அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய போவதில்லையென இந்திய பிரதமர் தெரிவிப்பு.

இந்திய இறக்குமதி பொருட்களுக்கு கூடிய இருபத்தைந்துவீத வரிவிதிப்பு தொடர்பான வரைவுஅறிக்கையை அமெரிக்க சுங்கம் மற்றும் உள்துறைஅமைச்சு நேற்று வெளியிட்டது.
ரஸ்யாவினால் அமெரிக்காவிட்க்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான கொள்கையின்கீழ் இந்த வரிகள் இந்தியா மீது விதிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று நள்ளிரவு பன்னிரெண்டு ஒன்றிட்கு பின்னர் கூடுதல்வரி அமுலுக்கு வரவுள்ளது.
குறிப்பாக ஆடைஏற்றுமதி,நகைகள் ,ரத்தினங்கள்,தளபாடங்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி 60.2 பில்லியன் டொலர் அளவிற்கு பாதிப்புள்ளாகும் எனவும் இதனால் தொழிலாளர் சார்ந்த துறைகள் ஏற்றுமதி 70 வீதம் குறையுமென எதிர்பார்க்க படுவதாக சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி குறிப்பிட்டுள்ளது.