ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் அவரது மகனும் கைது
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் இன்று (5)
Published January 5, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (5) காலை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் முன்னிலையான நிலையில் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குறித்த பிரிவில் இன்று (5) காலை முன்னிலையாகியிருந்தார்.
சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று நிதிக் குற்ற விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
வாக்குமூலம் வழங்கலின் பின்னர் அவரும், அவரது இளைய மகனும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.