விசேட எச்சரிக்கை -1600 நோயாளர்கள் சமூகத்தில் நடமாட்டம்

0

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்கு இலக்காகிய நோயாளர்களில் 19 தொடக்கம் 25 வயதுடையவர்களே அதிகமாக உள்ளதாக தேசிய பாலியல் தொற்று மற்றும் எச்.ஐ.வி ஒழிப்பு பிரிவின் தலைவர் விசேட மருத்துவர் ரசான்ஜலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதுவரை 2000 எச்.ஐ.வி நோயாளர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், 1600 நோயாளர்கள் பதிவாகாத நிலையில் சமூகத்தில் நடமாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் இருக்கின்றனர்.

மேலும் அவர்களில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் ஆண்களே அதிகமாக உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.