விமல் வீரவங்சவின் பிடிவிறாந்தை இரத்து செய்தது மேல் நீதிமன்றம்!

கைது செய்வதற்காக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச

Published January 14, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

கைது செய்வதற்காக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜரானதை அடுத்து, அந்த பிடிவிறாந்தை மீளப் பெறுவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

75 மில்லியன் ரூபாவிற்கும் அதிக சொத்துக்களை முறையற்ற வகையில் ஈட்டியதாகக் குற்றம் சுமத்தி, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (14) முற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது பிரதிவாதி நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் மொஹமட் மிஹால் பிடிவிறாந்து பிறப்பித்திருந்தார்.

பின்னர், விமல் வீரவங்ச இன்று (14) தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையானதை அடுத்துஇ குறித்த பிடிவிறாந்தை மீளப் பெறுவதற்கு நீதவான் உத்தரவிட்டார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *