20ஆவது அரசியலமைப்பு திருத்தம் – குழுவின் அறிக்கை இன்று அமைச்சரவையில்!

0

20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இன்று(புதன்கிழமை) குறித்த அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் குறித்து ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நேற்று அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குறித்த குழுவின் தலைவராக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.

20ஆவது திருத்தம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்ட புதிதாக உள்ளடக்கப்பட வேண்டிய மற்றும் திருத்தப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் குறித்த குழுவின் உறுப்பினர்கள் பிரதமருக்கு தெளிவுபடுத்தியிருந்தனர்.