அசோக ரன்வலவின் மனைவி வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் மனைவி கார் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில்

Published January 17, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் மனைவி கார் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அசோக ரன்வலவின் வீட்டின் அருகிலேயே நேற்று (16) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பியகம பொலிஸார் தெரிவித்தனர்.

களனி – பியகம வீதியில் அசோக ரன்வலவின் மனைவி செலுத்திய காரை வீட்டிற்குள் செலுத்த முற்பட்டபோது, களனி திசையிலிருந்து வந்த மற்றுமொரு கார் அந்தக் காரில் மோதியுள்ளது.

விபத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் இரவுப் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், குறித்த விபத்து குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய மற்றைய காரின் சாரதி களுத்துறை வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அவர் மது அருந்தியிருந்தமை பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த அசோக ரன்வலவின் மனைவி தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *