டித்வாவினால் உயிரிழந்தோரில் பலருக்கு மரணச் சான்றிதழ்
டித்வா புயலினால் உயிரிழந்த 525 பேருக்கு இதுவரை மரணச் சான்றிதழ்கள்...
Published January 21, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
டித்வா புயலினால் உயிரிழந்த 525 பேருக்கு இதுவரை மரணச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் சில சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (21) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.