IMF பிரதிநிதிகள் இன்று நாட்டிற்கு வருகை
திட்வா புயல் தாக்கத்தினால் ஏற்;பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்தல் மற்றும் அது தொடர்பில்
Published January 22, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
திட்வா புயல் தாக்கத்தினால் ஏற்;பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்தல் மற்றும் அது தொடர்பில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சிலர் இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளனர்.
அவர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள். அனர்த்தங்களால் ஏற்ப்பட்ட பொருளாதார மற்றும் மனிதாபிமான சவால்கள் குறித்து இலங்கை செயற்படும் விதம் தொடர்பில் குறித்த குழுவினர் ஆராயவுள்ளனர்.
அத்துடன் அடிப்படை வசதிகள், ஜீவநோபாயம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஏற்ப்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்தும் அவதானத்தை பெறுவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.