சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!
கடந்த டிசம்பர் 30ஆம் திகதி தெஹிவளை பகுதியில் 16 வயது சிறுமி ஒருவரை துப்பாக்கிச் சூடு
Published January 22, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
கடந்த டிசம்பர் 30ஆம் திகதி தெஹிவளை பகுதியில் 16 வயது சிறுமி ஒருவரை துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பில், சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின்படி, இவரே இந்த குற்றத்தைச் செய்த துப்பாக்கிதாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்: அருமதுர சமீர சில்வா (Arumadura Sameera Silva).
இவரைப் பற்றிய ஏதேனும் தகவல் தெரிந்தால், 0718596408 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக கல்கிசை பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
(சம்பந்தப்பட்ட புகைப்படம் மேலே இணைக்கப்பட்டுள்ளது)