20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை இன்றுடன் நிறைவு!

0

20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை இன்றுடன்(வெள்ளிக்கிழமை) நிறைவடையவுள்ளது.

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி,  உயிர்நீதிமன்றத்தில்  39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த மனுக்கள் உயர் நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹார, சிசிர டி ஆப்ரூ, ப்ரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில்,  இரண்டாவது நாளாக நேற்றும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதற்கமைய, 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட 32 மனுக்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் தங்களது அறிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

எஞ்சியுள்ள மனுக்கள் மீதன பரிசீலனை இன்று இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.