கொழும்பில் 77ஆவது இந்திய குடியரசு தின விழா!
இந்தியாவின் 77ஆவது குடியரசு தின விழா இன்று (26) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்
Published January 26, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இந்தியாவின் 77ஆவது குடியரசு தின விழா இன்று (26) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Ja) தலைமையில் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் (India house) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, இலங்கையின் அமைதி மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக உயிர்நீத்த இந்திய இராணுவ வீரர்களை நினைவுகூர்ந்து, இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் இந்திய அமைதி காக்கும் படை (IPKF) நினைவுச் சின்னத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.
