செம்மணியில் – மேலும் 8 எலும்புக்கூடுகள் அடையாளம்.
யாழ் - செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று...
Published August 29, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
யாழ் – செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதுவரை 177 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இதில் 164 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
யாழ் – செம்மணி – அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

