இலங்கையின் முதலாவது தானியங்கி எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பு திறப்பு

ஜப்பான் அரசின் நிதி உதவியுடன், சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு

Published January 28, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

ஜப்பான் அரசின் நிதி உதவியுடன், சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு (I.O.M.) நடைமுறைப்படுத்திய திட்டத்தின் கீழ், 8.4 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இலங்கையின் முதலாவது தானியங்கி எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பு (Automated Border Control – E-Gate System), இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டது.

தெற்காசியாவில் தொற்றுநோய்களைக் கையாள்வதற்கான எல்லைக் கட்டுப்பாட்டுத் திறனை வலுப்படுத்துவது இந்த வசதியின் நோக்கமாகும்.

தற்போது இந்த வசதி இலங்கை விமானப் பயணிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள், வெறும் 40 வினாடிகளுக்குள் தமது குடிவரவுச் சோதனைகளை முடித்துக்கொண்டு வெளியேற முடியும்.

இந்நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடிதுவக்கு, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசமாதா, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் சமிந்த பத்திராஜ மற்றும் I.O.M-இன் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தலைவர் கிறிஸ்டின் பார்கோ உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *