கடலோரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

ஹம்பாந்தோட்டையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக ....

Published January 30, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

ஹம்பாந்தோட்டையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தீவைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

காற்று வடகிழக்கு திசையிலிருந்து வீசும். காற்றின் வேகம் மணிக்கு 30-40 கிலோமீட்டர் வரை காணப்படும். களுத்துறையிலிருந்து கொழும்பு மற்றும் புத்தளம் ஊடாக மன்னார் வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையிலும் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 45-50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.

களுத்துறையிலிருந்து கொழும்பு மற்றும் புத்தளம் ஊடாக மன்னார் வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையிலும் உள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவுக்கு கொந்தளிப்பாகக் காணப்படும். தீவைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான கொந்தளிப்புடன் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த கடற்பரப்புகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அச்சமயங்களில் அக்கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *