நிந்தவூர் பகுதியில் 23 கிராம் 300 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
நிந்தவூர் பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சந்தேக நபரிடமிருந்து 23 கிராம் 300 மில்லிகிராம் ஐஸ் பறிமுதல் செய்யப்பட்டது.
நிந்தவூர் பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சந்தேக நபரிடமிருந்து 23 கிராம் 300 மில்லிகிராம் ஐஸ் பறிமுதல் செய்யப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதி நிந்தவூர் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் முக்கிய போதைப்பொருள் வியாபாரியை பின்தொடர்ந்த அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் பிரிவு ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இதன் போது குறித்த கைதான சந்தேக நபரிடமிருந்து 23 கிராம் 300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டது.
அம்பாறை பிரிவு ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் முதித பிரியங்கரவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின் போதுஇ சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட நவீன ரக வகை கார் 03 தொலைபேசிகள் 04 வங்கி அட்டைகள் மற்றும் 01 வங்கி புத்தகம் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.