இந்தியாவிலிருந்து இலங்கை வந்தடைந்தன புத்த பெருமானின் புனித சின்னங்கள்!
இந்திய அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடன் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட புனித
Published February 4, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
இந்திய அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடன் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட புனித தாதுக்கள் இன்று (04) பிற்பகல் 1 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன.
இந்தியாவிற்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் இந்த புனித தாதுக்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன.
இவை கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரைக்கு இன்று மாலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளன.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று பிற்பகல் புனித தாதுக்கள் தரிசனம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
நாளை முதல் எதிர்வரும் பெப்ரவரி 11 ஆம் திகதி வரை கொழும்பு கங்காராம விகாரையில் பொதுமக்களுக்கு இந்த புனித தாதுக்களை தரிசிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.