மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளுக்கும் காலி மற்றும் மாத்தறை

Published February 5, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த எச்சரிக்கை மையத்தினால் கடும் மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது கடும் மின்னல் தாக்கங்கள் மற்றும் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று என்பன ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மரங்களுக்கு கீழ் இருப்பதை தவிர்த்து, பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் இருக்கவும்.

வயல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் நீர்நிலைகள் போன்ற திறந்த வெளிப்பகுதிகளில் தங்குவதைத் தவிர்க்கவும்.

இடியுடன் கூடிய மழையின் போது தொலைபேசிகள் மற்றும் மின்சார உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

துவிச்சக்கர வண்டிகள், உழவு இயந்திரங்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

விழுந்து கிடக்கும் மரங்கள் மற்றும் மின்கம்பிகள் குறித்து அவதானமாக இருக்கவும்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.