இந்திய மீனவர்கள் மீண்டும் விளக்கமறியலில்.
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழில் நடவடிக்கையில்...
Published September 1, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் நெடுந்தீவு கடற்பகுதியில் கைதான 4 இந்திய மீனவர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த மீனவர்களுக்கு ஏற்கனவே இரண்டு சந்தர்ப்பங்களில் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று (1) மீண்டும் சந்தேகநபர்களை எதிர்வரும் 11ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
