ஹொரண வைத்தியசாலையின் புதிய பிரிவு திறந்துவைப்பு
ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார வைத்திய ...........
ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நோய்த்தடுப்பு சிகிச்சை பிரிவு நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. நோய்த்தடுப்பு சிகிச்சை பிரிவு என்பது மக்களின் சுகாதார தேவையில் முக்கியமான ஒன்றாகும்.
உயிருக்கு அச்சுறுத்தலான நோய் நிலைமைகளினால் பாதிக்கப்படும் நோயாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் வாழ்க்கைத் தரத்தை கட்டியெழுப்பவும் இதனூடாக நடவடிக்கை எடுக்கப்படும்.
உடல், உள , சமூக அல்லது ஆன்மீக சார்ந்த பிரச்சினைகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு சரியான மதிப்பீடுகள் மற்றும் சிகிச்சையளிப்பதன் ஊடாக பாதிப்புகளை குறைத்து பராமரிப்பை வழங்குவதற்கும் சந்தர்ப்பம் கிடைக்மென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.