இன்று முதல் தபால் கட்டணங்களில் திருத்தம்

தபால் கட்டணங்களை அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் இன்று (09) முதல் நடவடிக்கை

Published February 9, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

தபால் கட்டணங்களை அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் இன்று (09) முதல் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, குறைந்தபட்ச தபால் கட்டணத்தை 70 ரூபாவாக அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இந்தப் புதிய கட்டணங்கள் இன்று முதல் அமுலுக்கு வரும் எனவும் தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பொது மற்றும் வணிக கடித சேவைகளுக்கான அடிப்படை எடை வகுப்பு 20 கிராமில் இருந்து 30 கிராமாக திருத்தப்பட்டுள்ளதாகவும், துண்டுப்பிரசுரம் அல்லது துண்டுப்பிரசுரங்களின் தொகுப்பின் அதிகபட்ச எடை 100 கிராமில் இருந்து 120 கிராமாக திருத்தப்பட்டுள்ளதாகவும் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொண்டு நிறுவனங்கள், சமூக சேவைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அனுப்பும் கடிதங்களுக்கு முன்னர் வசூலிக்கப்பட்ட 30 ரூபா கட்டணம் தற்போது 50 ரூபாவாக ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அமைச்சகங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் ஊடாக அனுப்பப்படும் தபால் பொருட்களுக்காக வசூலிக்கப்படும் கட்டணம் 110 ரூபாயில் இருந்து 130 ரூபாவாகவும், ஒரு அஞ்சல் அட்டையின் விலை 20 ரூபாயில் இருந்து 40 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இருப்பினும், சாதாரண பொதிகளுக்கான கட்டணங்கள் மற்றும் இலங்கை தபால் கூரியர் சேவைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் திருத்தப்படாது என்று தபால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *