சமன் ஏக்கநாயக்கவுக்கு எதிரான வழக்கு இன்று நீதிமன்றில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராகப் பணியாற்றிய சமன்

Published February 11, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்கவுக்கு எதிரான வழக்கு இன்று (11) கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

சுமார் 166 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில்இ முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு கடந்த ஜனவரி 28ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கஇ சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் சரணடைந்ததைத் தொடர்ந்து இன்றைய தினம் (11) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

அதன்படிஇ அவரது விளக்கமறியல் காலம் இன்றுடன் நிறைவடைவதால்இ அவர் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *