புதிய தபால் நிலையம் இன்று திறப்பு
தொட்டம்கஸ்லந்த பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவையை நிவர்த்தி செய்யும்............
தொட்டம்கஸ்லந்த பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய தபால் நிலையம் இன்று முற்பகல் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
நீண்ட வரலாற்றைக் கொண்ட தொட்டம்கஸ்லந்த தபால் நிலையம், இதுவரை காலமும் வாடகை அடிப்படையிலான ஒரு கட்டிடத்திலேயே இயங்கி வந்தது.
இதற்கான நிரந்தரக் கட்டிடத்தை அமைப்பதற்கு 1996 ஆம் ஆண்டிலேயே காணி ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த 30 வருடங்களாக ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் இதற்கான நடைமுறை ரீதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் வழங்கிய வாக்குறுதிக்கமைய, மிகக் குறுகிய காலத்தில் இத்திட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
14.71 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டிடத்திற்கு, கடந்த 2025 செப்டம்பர் 07 ஆம் திகதி அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களினால் அடிக்கல் நாட்டப்பட்டது.