ஐக்கிய இராச்சியத்தின் பிரதிப் பிரதமர் இலங்கை வருகை
ஐக்கிய இராச்சியத்தின் பிரதிப் பிரதமர் திரு. டேவிட் லாம்மி (David Lammy) ஒரு நாள்
ஐக்கிய இராச்சியத்தின் பிரதிப் பிரதமர் திரு. டேவிட் லாம்மி (David Lammy) ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (பெப்ரவரி 17) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவர் டோஹாவிலிருந்து வருகை தந்த கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways) QR-664 விமானம் மூலம் காலை 09:11 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவருடன் பிரதிப் பிரதமர் அலுவலகத்தின் 7 சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று வருகை தந்துள்ளனர்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட விருந்தினர் அறையில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் அதிகாரிகள் குழுவினர் அவர்களை வரவேற்றனர்.
திரு. டேவிட் லாம்மி மற்றும் அவரது குழுவினர் அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.
சிறுவர் பராமரிப்பு சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனம் மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.
திரு. டேவிட் லாம்மி தலைமையிலான இந்தத் தூதுக்குழுவினர் தமது உத்தியோகபூர்வ பணிகளை முடித்துக்கொண்டு இன்று (பெப்ரவரி 17) மாலை நாட்டிலிருந்து புறப்படவுள்ளனர்.
