தோட்ட தொழிலாளர்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு
இம்முறை ஆர்ப்பாட்டம் போராட்டம் பணிப்பகிஷ்கரிப்பு எதுவும் இல்லாமல் தோட்ட
Published February 17, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இம்முறை ஆர்ப்பாட்டம் போராட்டம் பணிப்பகிஷ்கரிப்பு எதுவும் இல்லாமல் தோட்ட தொழிலாளர்களுக்கு 1750 ரூபாய் சம்பளம் உயர்த்தி கொடுத்த ஜனாதிபதி அவர்களுக்கு நன்றிகள் தெரிவிக்கும் நிகழ்வு இன்று நடைப்பெற்றது.
புப்புரஸ்ஸ லெவலன் தோட்டத்தில் உள்ள மக்கள் இன்று தேயிலை மலைக்கு முன்பாக சிவப்பு கொடிகளை ஏந்தி ஜனாதிபதி படங்களை வைத்து கொண்டு கேக் வெட்டி ஜனாதிபதி அவர்களுக்கு நன்றிகள் தெரிவித்தனர்.
இதில் தோட்ட தொழிலாளர்கள் இளைஞர்கள் கலந்துகொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.