மணல் அகழ்வு ஊழல் தொடர்பில் சிறிதரனுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற மணல் அகழ்வு ஊழல்
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற மணல் அகழ்வு ஊழல் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவில் புலனாய்வு முன்னணியின் (Civil Intelligence Front) தலைவர் சஞ்சய மஹவத்த இந்த முறைப்பாட்டை ஊடகங்களுக்கு முன்னிலையில் வழங்கினார்.
வடக்கு பகுதியில் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த “மணல் கொள்ளை” மூலம் பாரிய ஊழல் மற்றும் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு அரசாங்கத்தையும் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஸ்ரீதரன் இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுவதாக மஹவத்த குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த அரசாங்க காலம் முதல் இடம்பெற்று வரும் இந்த மணல் மாஃபியா குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என சிவில் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.