நான்கு படகுகளுடன் 22 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு

Published February 19, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு படகுகளுடன் 22 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பினுள் இரண்டு படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 12 கடற்தொழிலாளர்களும், மன்னார் கடற்பரப்பினுள் இரண்டு படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 10 கடற்தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டள்ளனர்

கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களையும் அவர்களின் படகுகளையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக அந்த அந்த பிரதேச கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *