எரிவாயுவிற்கு தட்டுப்பாடு இல்லை – லிட்ரோ
வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டருக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லையென லிட்ரோ நிறுவனம்
Published February 19, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டருக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லையென லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதனால் எரிவாயுவை கொள்வனவு செய்யும் விடயத்தில் பீதியடைய தேவையில்லையென குறித்த நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 17 மற்றும் 18ம் திகதிகளில் ஏற்கனவே 284000 வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டர்களை விநியோகத்திலுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் சனிக்கிழமை வரை மேலும் 351000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.