மனைவியை கொலை செய்த இலங்கையருக்கு ஆயுள் தண்டனை
பிரித்தானியாவில் வசிக்கும் 37 வயதான திஷர வெரகலகே, பிரிந்து வாழும் தனது மனைவியை
பிரித்தானியாவில் வசிக்கும் 37 வயதான திஷர வெரகலகே, பிரிந்து வாழும் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. குறித்த கொலைச் சம்பவம் கடந்த 2025ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 21ம் திகதி பிரித்தானியாவின் கார்டிப் பகுதியிலுள்ள வாகன தரிப்பிடத்தில் இடம்பெற்றது.
சம்பவத்தில் 32 வயதான இலங்கை பிரஜை நிரோதா கல்பனி நிவுன்ஹெல்ல கொலை செய்யப்பட்டார். குறித்த இருவரும் 6 மாதங்கள் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வழக்கு விசாரணையின் ஆரம்பத்தில் கொலை செய்த குற்றச்சாட்டை கணவர் மறுத்த போதிலும் கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.