நீதிமன்ற தீர்ப்பால் புதிய 10% வரியை விதித்த ட்ரம்ப்
உலக நாடுகளுக்கான வர்த்தக வரி தொடர்பில் அமெரிக்க உச்சநீதிமன்றத்தினால் வெளியான
உலக நாடுகளுக்கான வர்த்தக வரி தொடர்பில் அமெரிக்க உச்சநீதிமன்றத்தினால் வெளியான தீர்ப்பினையடுத்து ஜனாதிபதி ட்ரம்ப் உலகளாவிய ரீதியில் புதிய 10 வீத வரியை இறக்குமதி பொருட்களுக்கு விதிக்க தீர்மானித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் சில வரிகளை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. இதற்கு பதிலாகவே புதிய வரியை அவர் விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தேசிய அவசர நிலைமைகளுக்கென உருவாக்கப்பட்ட சட்டத்தின் கீழ் இறக்குமதி பொருட்களுக்கு உயர் வரியை விதித்ததன் மூலம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது அதிகார வரம்பை மீறியுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பயங்கரமானது என ட்ரம்ப் விமர்சித்துள்ளார். தனது வர்த்தக கொள்கையை எதிர்த்தவர்கள் முட்டாள்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்ப் விதித்த வரிகளை எதிர்த்து சில வர்த்தக நிறுவனங்களும் அமெரிக்க மாநிலங்களும் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.