அக்குரேகொட துப்பாக்கி சம்பவம் : விசாரணையில் பகீர் தகவல்

அக்குரேகொட இரட்டைக் கொலைத் தொடர்பில் நேற்று கைது .......

Published February 22, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 3 min read

அக்குரேகொட இரட்டைக் கொலைத் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி குறித்து மேலும் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 

 அதன்படி, குறித்த துப்பாக்கிதாரி ஒரு முன்னாள் இராணுவச் சிப்பாய் எனவும், 2009 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தில் அவர் சட்டபூர்வமாக இராணுவத்திலிருந்து விலகியவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 கடந்த 13 ஆம் திகதி அக்குரேகொட பிரதேசத்தில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

 இதற்கமைவாக, இந்தக் குற்றத்திற்கு உதவி வழங்கியமை மற்றும் சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் கடந்த 16 ஆம் திகதி கொட்டாவை மற்றும் அத்துருகிரிய பொலிஸ் பிரிவுகளிலும், 17 ஆம் திகதி கஹதுடுவ பொலிஸ் பிரிவிலும் மூன்று சந்தேகநபர்கள் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். 

 சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்திருந்த மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் ஹோமாகம வலய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு, இந்தக் குற்றத்தின் துப்பாக்கிதாரியாகச் செயற்பட்ட சந்தேகநபர் ஒருவரை அம்பலாங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தூவ பிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்துள்ளது. 

சந்தேகநபர் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *