மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இலங்கைக்கு வடகிழக்கே வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்த

Published February 23, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

இலங்கைக்கு வடகிழக்கே வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்த மண்டலம், வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் பலவீனமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்பரப்புகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அத்துடன் அவ்வப்போது மணிக்கு 50-60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

பலத்த காற்று காரணமாக இப்பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக மிகக் கடுமையான காற்றும் வீசக்கூடும் என்பதால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

கடற்றொழில் மற்றும் கப்பல் போக்குவரத்து சமூகத்தினர், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் அடுத்தடுத்த முன்னறிவிப்புகள் மற்றும் அறிவித்தல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *