LATEST
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5%க்கும் மேல் சரிவு!இடி, மின்னல், பலத்த காற்று! வெளியான அவசர வானிலை எச்சரிக்கைஅரசியலமைப்பு திருத்தத்திற்கு மக்கள் அங்கீகாரம் வேண்டும்!சஜித்துக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு!வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்று வீசும் அபாயம்!ஹம்பாந்தோட்டையில் தேங்கிய 1,025 இறக்குமதி வாகனங்கள்!இலங்கை பொலிஸில் 383 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் கோரல்!டெங்கு வேகமாக பரவுகிறது – மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுகோள்!உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5%க்கும் மேல் சரிவு!இடி, மின்னல், பலத்த காற்று! வெளியான அவசர வானிலை எச்சரிக்கைஅரசியலமைப்பு திருத்தத்திற்கு மக்கள் அங்கீகாரம் வேண்டும்!சஜித்துக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு!வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்று வீசும் அபாயம்!ஹம்பாந்தோட்டையில் தேங்கிய 1,025 இறக்குமதி வாகனங்கள்!இலங்கை பொலிஸில் 383 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் கோரல்!டெங்கு வேகமாக பரவுகிறது – மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுகோள்!
உள்ளூர்

முடிவில்லா ஆலோசனைகள்… தீர்வுக்காக காத்திருக்கும் மக்கள்

February 26, 2026 · Tamil Ceylon LK

நேற்று மண்முனை மேற்கு , வவுணதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தாலும், மக்களுக்கு தேவையான முக்கிய பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு கிடைக்காமல் இருப்பது கவலைக்கிடமானது. மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான கந்தசாமி பிரபு , இக்கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் மற்றும் அமைச்சரான சுனில் ஹந்துன்நெத்தி, பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர், துறைசார் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை–மனித மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இப்பிரதேசம் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு சுற்றாடல் அமைச்சர் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தபோது பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். ஆனால் ஒரு வருடம் கடந்தும் அதே பிரச்சினைகள் குறித்து மீண்டும் பேச வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தலைமையிலான உள்ளூராட்சி சபைகள் முன்வைக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் உதவி ஆணையாளர் தரப்பில் தாமதம் நிலவுகிறது. தமிழரசுக் கட்சி சார்ந்த உள்ளூராட்சி அமைப்புகள் அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவதைத் தடுக்க முயற்சி நடைபெறுகின்றதா என்ற சந்தேகம் உள்ளது.

Related Stories

மேலும் ›