மட்டக்களப்பு மாவட்டத்தில் இரவு வேளைகளில் எரிபொருளுக்கு மக்கள் நீண்ட வரிசை
ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலைமையினையடுத்து
ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலைமையினையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இரவு வேளைகளிலும் எரிபொருளுக்கு மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்பதை காணமுடிந்துள்ளது.
நேற்றைய தினம் எரிபொருளுக்கான பெற்றோலும் அதிகரித்துள்ள பொதுமக்கள் எரிபொருள் நிலையங்களை நோக்கி படையெடுக்கும் நிலைமையினை காணமுடிந்துள்ளது.
மட்டக்களப்பு நகரில் உள்ள மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருப்பதை காணமுடிந்துள்ளது.
இன்று இரவும் எரிபொருள் வழங்கும் வாகனங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கிவருவதையும் காணமுடிந்துள்ளது.
எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படாது என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையிலும் பொதுமக்கள் எரிபொருள் நிலையங்களுக்கு படையெடுக்கும் நிலைமையினையே காணமுடிந்துள்ளது.