காணி உறுதி பத்திரம் வழங்கும் திட்டம் ஆரம்பம்.
காணி உறுதி பத்திரம் விநியோகம்
Published August 27, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
காணி அற்ற குடும்பங்களுக்கு காணி உறுதி பத்திரம் வழங்கும் திட்டம் ஆரம்பித்துள்ளதாக காணி அபிவிருத்தித்திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் முதற்கட்டம் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படுவதாக காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீர ஆராய்ச்சி தெரிவித்தார்.முதற்கட்டத்தில் நான்காயிரம் உறுதிபத்திரம் வழங்கப்பட உள்ளன அனைத்து மாவட்டங்களிலும் காணியற்ற குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு காணி உரிமை வழங்குவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் என காணி ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.