LATEST
ஜனாதிபதிக்கும் இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு!ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் புதிய தலைமை!சர்வதேச எண்ணெய் விலை மீண்டும் உச்சம்!கபில சந்திரசேனவின் கைபேசி தரவு விசாரணையில்!குதியற்ற வாகனங்களுக்கு நடவடிக்கை தயாராகிறது!உற்பத்திச் செலவு அதிகரிப்பு: டின் மீன் விலை உயர்த்த கோரிக்கை!ராஜ்நாத் சிங் வருகையில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!ரூ.2 கோடிக்கும் அதிகமான மோசடி: இருவர் விளக்கமறியலில்!ஜனாதிபதிக்கும் இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு!ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் புதிய தலைமை!சர்வதேச எண்ணெய் விலை மீண்டும் உச்சம்!கபில சந்திரசேனவின் கைபேசி தரவு விசாரணையில்!குதியற்ற வாகனங்களுக்கு நடவடிக்கை தயாராகிறது!உற்பத்திச் செலவு அதிகரிப்பு: டின் மீன் விலை உயர்த்த கோரிக்கை!ராஜ்நாத் சிங் வருகையில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!ரூ.2 கோடிக்கும் அதிகமான மோசடி: இருவர் விளக்கமறியலில்!
உள்ளூர்

இலஞ்சம் பெற்ற 49 பேர் கைது!

September 2, 2025 · Tamil Ceylon LK

இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் இலஞ்ச பெறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த காலகட்டத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு 3,937 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அதன் அடிப்படையில் 72 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்ட நிலையில் அவற்றில் 39 சுற்றிவளைப்புகள் வெற்றியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதிகளவில் இலஞ்சம் பெற்ற சம்பவங்கள் பொலிஸ் திணைக்களத்தில் பதிவானதுடன், இதுவரை 17 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நீதி அமைச்சு, சுகாதார அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் பிரதேச செயலகங்கள் போன்ற அரச நிறுவனங்களில் கடமையாற்றியவர்களும் அவர்களில் அடங்குவதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் கடந்த காலங்களில் இலஞ்ச வழக்குகள் தொடர்பாக 27 நபர்களை நீதிமன்றங்கள் குற்றவாளிகளாக அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

மேலும் ›