LATEST
மின்கல சேமிப்பால் கூரை சூரிய மின் கட்டுப்பாடுகள் தளர வாய்ப்பு!அமெரிக்கா ஏற்க வேண்டிய 7 நிபந்தனைகளை வெளியிட்ட ஈரான்!முன்னாள் குடிவரவு ஊழியர் ஒருவர் போலி விசா ஆவண மோசடியில் சிக்கியுள்ளார்.ஆசிய விளையாட்டில் தங்கத்தை நோக்கி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி!கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 தாய்லாந்து பெண்கள் கைது!மேல், சப்ரகமுவ உள்ளிட்ட பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை!20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் தொடக்கம்CID வாக்குமூல சர்ச்சையில் விரிவான விளக்கம் அளித்த றிஷாட்!மின்கல சேமிப்பால் கூரை சூரிய மின் கட்டுப்பாடுகள் தளர வாய்ப்பு!அமெரிக்கா ஏற்க வேண்டிய 7 நிபந்தனைகளை வெளியிட்ட ஈரான்!முன்னாள் குடிவரவு ஊழியர் ஒருவர் போலி விசா ஆவண மோசடியில் சிக்கியுள்ளார்.ஆசிய விளையாட்டில் தங்கத்தை நோக்கி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி!கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 தாய்லாந்து பெண்கள் கைது!மேல், சப்ரகமுவ உள்ளிட்ட பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை!20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் தொடக்கம்CID வாக்குமூல சர்ச்சையில் விரிவான விளக்கம் அளித்த றிஷாட்!
உள்ளூர்

முன்னாள் குடிவரவு ஊழியர் ஒருவர் போலி விசா ஆவண மோசடியில் சிக்கியுள்ளார்.

September 20, 2026 · Tamil Ceylon LK

போலி ஆவணங்களைத் தயாரிப்பதற்காக மற்றவர்களுக்குச் சொந்தமான 48 கடவுச்சீட்டுகளைத் தன்வசம் வைத்திருந்த குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முன்னாள் அலுவலக உதவியாளர் ஒருவர் நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து கடவுச்சீட்டுகள், பணத் தாள்களின் பாதுகாப்பு அடையாளங்களைப் பரிசோதிக்கும் போலி இயந்திரம் ஒன்று மற்றும் ஸ்மார்ட் ரக கைத்தொலைபேசி ஒன்று என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடுவலை, இஹள போமிரிய பகுதியில் உள்ள வீடொன்றில் நபரொருவர் தூதரகங்கள் ஊடாக விசாக்களைப் பெற்றுக்கொள்வதற்காகப் போலி ஆவணங்களைத் தயாரிப்பதாக நவகமுவ பொலிஸ் நிலையத்தின் பிரிவுப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு (101998) தகவல் கிடைத்துள்ளது.

அத்தகவலுக்கு அமைய, நவகமுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சுசந்த ஜெயநாத்தின் வழிகாட்டலில், ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஆர்.கே.பி.வி. ஸ்ரீமால் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட சோதனையின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, தான் சுமார் 5 வருடங்கள் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றியதாகத் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர், பத்தரமுல்லை பகுதியில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றில் பணியாற்றியபோதே இந்தக் கடவுச்சீட்டுகளை எடுத்து வந்ததாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா விசா மூலம் பல்வேறு நாடுகளுக்குச் செல்ல முற்படும் நபர்கள், இதற்கு முன்னர் வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளனர் என்பதைக் காட்டும் வகையில், பழைய கடவுச்சீட்டுகளில் உள்ள விசா பகுதிகளை நீராவியைப் பயன்படுத்திச் சூட்சுமமாகப் பிரித்தெடுத்து, புதிய கடவுச்சீட்டுகளில் போலியாக ஒட்டியுள்ளார்.

இதற்காக ஒரு நபரிடமிருந்து 20,000 ரூபாய் வீதம் கட்டணமாகப் பெற்றுள்ளதாகவும் சந்தேகநபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடவுச்சீட்டுகளில் சுமார் 15 கடவுச்சீட்டுகளில் இருந்து சந்தேகநபர் இவ்வாறு விசா பகுதிகளை அகற்றியுள்ளமை ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 70 வயதுடையவர் என்பதுடன், அவர் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related Stories

மேலும் ›