மட்டக்களப்பில் கைக் குண்டுகள் மீட்பு
மட்டக்களப்பு - ஏறாவூர், ஓட்டுப்பள்ளிக்கு அருகாமையில் உள்ள பழைய பாடசாலையொன்று
Published September 9, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
மட்டக்களப்பு – ஏறாவூர், ஓட்டுப்பள்ளிக்கு அருகாமையில் உள்ள பழைய பாடசாலையொன்று அமைந்துள்ள காணியில் இருந்து 4 கைக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் ஆயுதங்கள் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசேட அதிரடி படையினர் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர் இணைந்து இன்று காலை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் லியனகே தலைமையில் அகழ்வுப் பணியை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது 4 கைக் குண்டுகள் மீட்கப்பட்டதோடு, மேலும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

