கடலுக்கு சென்ற மீனவர்கள் மாயம் !
கல்பிட்டி, சின்னகுடியிருப்பு களப்பு பகுதியில் இருந்து...
Published September 23, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கல்பிட்டி, சின்னகுடியிருப்பு களப்பு பகுதியில் இருந்து கடந்த 21 ஆம் திகதி மாலை படகு ஒன்றில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
காணாமல் போன மீனவர்கள் கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த 27 மற்றும் 34 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
கல்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் இணைந்து காணாமல் போன மீனவர்களைத் தேடும் நடவடிக்கையை தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.